டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயற்கை, ஈ படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் பேராண்மை. இந்த படத்தில் அவர் ஜெயம்ரவியை நடிக்க வைத்தபோது, சாக்லேட் பாய் அவரைப்போய் எப்படி ஆக்சன் கதையில் நடிக்க வைக்கப்போகிறீர்கள்? ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? என்று சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்கு, அவர் இதற்கு முன்பு நடித்த கதைகள் அப்படி. அதனால் அந்த இமேஜ் விழுந்திருக்கிறது. ஆனால் இந்த கதையில் நடித்தால் ஜெயம்ரவியின் இமேஜே மாறிவிடும் என்று சொல்லித்தான் பேராண்மையில் அவரை நடிக்க வைத்தார். அவர் சொன்னது போலவே அந்த படம் ஜெயம்ரவியின் இமேஜை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அதையடுத்து ஆக்சன் கதைகளுக்கு அவரை அணுகத் தொடங்கினார்கள் இயக்குனர்கள்.
அதேபோல்தான் இப்போது புறம்போக்கு படத்திலும், ரொமான்டிக் ஹீரோவான ஆர்யாவை புரட்சியாளனாக நடிக்க வைத்திருக்கிறார். இதையடுத்தும், ஒரு ஜாலியான நடிகரை, இப்படி புரட்சிக்காரனாக மாற்றினால் எப்படி ரசிகர்கள் ஏற்பார்கள்? என்று கேள்வி ஜனநாதனை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அவர் தரும் பதில், கதைகளும், கேரக்டர்களும்தான் நடிகர்களின் இமேஜை உருவாக்குகின்றன. இதுவரை ஆர்யா நடித்த கதைகள் வேண்டுமானால் ரசிகர்கள் மத்தியில் அவரை ஒரு ஜாலியான நடிகர் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம்.