ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்றைய இளம் இயக்குநர்கள் தெளிவானவர்களாக இருக்கிறார்கள். ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப் படத்தை கமிட் பண்ணிக் கொள்வதோடு, பெரிய சம்பளத்தையும் நிர்ணயித்து தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். இதற்கு வெங்கட்பிரபுவும் விதிவிலக்கில்லை. ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப்படத்தை கமிட் பண்ணிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கடைசியாய் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே... ஏறக்குறைய பாதி படம் வளர்ந்தநிலையிலேயே சூர்யாவுக்கு கதை சொல்லி அடுத்தப் படத்தை உஷார் பண்ணினார். தற்போது சூர்யா நடித்துள்ள மாஸ் படம் முடிவடைந்தநிலையில் அடுத்தப் படத்துக்கான வேலையை தொடங்கிவிட்டார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தயாரிப்பில்தான் தன் அடுத்தப் படத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு. அந்தப் படத்தில் நயன்தாரா - த்ரிஷா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். இருவருக்கும் கதை சொல்லி கால்ஷீட் ரிசர்வ் செய்து வைத்துவிட்டார்.