ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் ' 'இனிமே இப்படித்தான்'. புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் காமெடியும் , காதலும் ஒன்றிணைந்தாற்போல் முருகானந்த் என்ற பெயரில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.
“ சந்தானம் அவர்களுக்கு எங்கள் வசம் இருந்த மூன்று கதைகளும் பிடித்திருந்தது, 'இனிமே இப்படிதான் கதையை தேர்வு செய்ததோடு இல்லாமல் . அப்படத்தை எங்களையே இயக்கவும் சொன்னார். எனது ஞாபகம் சரியாக உள்ளதென்றால் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் அவரது படத்தில் எங்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துவேன் என்று கூறினார் சந்தானம். சொன்ன வார்த்தைக்கு ஒரு எழுத்து குறையாமல் நிறைவேற்றியுள்ளார். “ என ஆரம்பித்தார் இயக்குனர் இரட்டையரில் ஒருவரான பிரேம் ஆனந்த்.
“ 'இனிமே இப்படித்தான்' சந்தானத்திற்கு கச்சிதமான ஒரு ரொமாண்டிக் காமெடி படம். அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லா இளைஞனாக வருகிறார் சந்தானம். ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், VTV கணேஷ் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.” எனக் கூறினார் இயக்குனர் முருகன்.