'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சிம்புவைப் பொறுத்தவரை நடிப்பில் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரை ஆரம்பத்திலேயே எடுத்து விட்டார். சின்ன வயதில் இருந்தே நடிப்பதால் எத்தனை காட்சிகள் என்றாலும் எளிதாக நடித்து விடுவார். அதுவும் சிங்கிள் டேக்கிலேயே ஓகே செய்வார். அதேசமயம், அவருக்குள்ளும் ஒரு டைரக்டர் இருப்பதால், கதை விசயத்தில் அதிகமாக அவரது தலையீடு இருக்கும் என்று முன்பு கூறினர். அதனால் பின்னர் அதை குறைத்துக்கொண்டார் சிம்பு. அதையடுத்து, இப்போது படப்பிடிப்புக்கு சிம்பு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும், கேரவனுக்குள்ளேயே பொழுதை கழிக்கிறார் என்றொரு குற்றச்சாட்டு நிலவிக்கொண்டிருக்கிறது. ஆனால், நேற்று சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிம்பு, இதுபற்றி ஆவேசமாக பேசினார். அதாவது என்னைப்பற்றி ஏதாவது தவறான வதந்திகளை பரப்பி விடுவதே சிலருக்கு வேலையாகி விட்டது. நான் படப்பிடிப்புக்கே போகாம எப்படி நான் நடிச்சு இத்தனை படங்கள் ரிலீசாச்சு. அதுவும் எல்லா படங்களுமே திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்துள்ளன.