டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று கியூப் மற்றும் யு.எப்.ஓ நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டன.
நடிகர்கள் புறக்கணிப்பு
திரையுலகம் திரண்டு நடத்திய இந்த போராட்டத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். நடிகர்கள் ஆர்யா, ஜீவா, உதயநிதி, நாசர், சரவணன், சந்தானம், நடிகைகள் குயிலி, நளினி தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டவர்கள்கூட சில மணித்துளிகள் இருந்துவிட்டுச் சென்று விட்டனர். நேற்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான படப்பிடிப்புக்கு விடுமுறைதான். 90 சதவிகித முன்னணி நடிகர்கள் வீட்டில்தான் இருந்தார்கள். யாரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கக் தலைவர் சரத்குமார்கூட சில மணி நேரம் இருந்துவிட்டு கிளம்பி விட்டார்.
தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
உண்ணாவிரத்தில் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் பேசும்போது "இயக்குனர்கள் மோசமான படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை ஏமாற்றுகிறார்கள்" என்று பேசினார். உடனே அருகில் இருந்த இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் எழுந்து "இயக்குனர்களை தவறாக பேசுவதை அனுமதிக்க முடியாது" என்று கூறி உண்ணாவிரத பந்தலில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வேறுசில இயக்குனர்களும் எழுந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. "நான் எல்லா இயக்குனரையும் சொல்லவில்லை" என்று இப்பராஹிம் ராவுத்தர் சமாதானம் கூறினார்.
வெளிநடப்பு செய்த விக்ரமனிடம் பலரும் பேசி சமாதானம் செய்தனர். உண்ணாவிரதம் முடியும் தருவாயில் பேசிய இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி "காலையில் நடந்த சலசலப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இருவருமே சமாதானமாகி விட்டனர்" என்று தெரிவித்தார்.
கோப பேச்சு
உண்ணாவிரம் 9 மணி நேரம் நடந்ததால் பலருக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பெரும்பாலானோர் கியூப் என்பது தனியார் அமைப்பு அவர்களிடம் இதுபோன்ற அமைதி உண்ணாவிரதம் சரிவராது. சட்டையை பிடித்து கேட்க வேண்டும் என்கிற ரீதியில் பேசினார்கள். பெப்சி தலைவர் ஜி.சிவா பேசும்போது "உண்ணாவிரத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களை அனுமதியுங்கள் நாங்கள் ராயப்பேட்டையை ஒரு ரவுண்ட் வருகிறோம் (கியூப் நிறுவனம் இருக்கும் பகுதி) எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்" என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் சவுந்தர் பேசும்போது "சினிமாவை வைத்து வாழும் மீடியாக்கள் கியூப் நிறுவனங்களுக்கு சாதமாக செய்தி வெளியிடுகிறது" என்று சாடினார்.
ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை
உண்ணாவிரத்தின் முடிவில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலைக்காக இரண்டு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் உண்ணாவிரத தீர்மானங்களை நிறைவேற்றினர்.