'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மூத்த மகன் எம்.ஆர்.ஆர்.வாசு. தந்தையின் வாரிசாக இவரும் சினிமாவில் நடித்தார். வாசுவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் (வயது 44). இவரும் தந்தை வழியில் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து வந்தார். தாத்தாவின் ரத்த கண்ணீர் நாடகத்தை நடத்தி அதிலும் தாத்தா வேடத்தில் நடித்து வந்தார்.ரத்தகண்ணீர் நாடகத்தை மீண்டும் திரைப்படமாக எடுக்க வேண்டும். அதில் தாத்தா வேடத்தில் தானே நடிக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்கினார். ரத்த கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் காந்தாவுடன் ஒரு சொகுசு பங்களாவில் வாழ்வார். அந்த காட்சிக்காக எம்.ஆர்.ஆர்.சதீஷ் குன்றத்தூரில் உள்ள நீச்சல்குளத்துடன் கூடிய பங்களா ஒன்றை படப்பிடிப்பு நடத்த பேசி முடித்திருந்தார்.அதை பார்வையிடுதற்காக நண்பர்களுடன் சென்ற அவர். அந்த பணி முடிந்ததும். நீச்சல்குளத்தில் குளித்துள்ளார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் தண்ணீரில் மூழ்கினார். இதை தாமதமாக அறிந்த நண்பர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.எம்.ஆர்.ஆர்.சதீஷின் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சதீசுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ப்ரீத்தி, பவித்ரா ஸ்ரீகமலிகா என்ற 3 மகள்களும் உள்ளனர். சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.