'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் சசி கபூருக்கு, மும்பையில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவித்தார்.
திரையுலகிற்கு சசி கபூர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு, சசி கபூருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவித்திருந்தது. இம்மாதம் 3ம் தேதி, டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் பால்கே விருது மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசி கபூருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், சசிகபூரால், பால்கே விருது பெற இயலவில்லை. இதனிடையே, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூருக்கு, பால்கே விருது வழங்கி கவுரவித்தார்.