ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கிய முதல் படம் எங்கேயும் எப்போதும். அப்படத்தில் ஜெய்-அஞ்சலியின் காம்பினேசன் பேசப்பட்டது. குறிப்பாக, ஒரு பெண்ணின் மனநிலை கொண்டவராக ஜெய் நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து விக்ரம்பிரபு நடிப்பில் இவன்வேற மாதிரி படத்தை இயக்கிய சரவணன், தனது 3-வது படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைந்தார். அவரை அதிரடியான ஆக்சன் ஹீரோவாக வைத்து வலியவன் படத்தை இயக்கினார். அதோடு ஜெய்யின் வியாபாரத்தை கருத்தில் கொள்ளாமல் டபுள் மடங்கு செலவு செய்து அந்த படத்தை இயக்கினார். ஆனால், தியேட்டரில் ஒரு காட்சிகூட அப்படம் ஹவுஸ்புல்லாக ஓடவில்லை. ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்டும் ஓடியது. விளைவு, அதையடுத்து தனது புதிய படத்திற்காக ஜெய்யை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்த, நான் சிகப்பு மனிதன் இயக்குனர் திரு, இப்போது அப்படத்தின் பட்ஜெட்டை பாதியாக குறைத்து விட்டாராம். அது மட்டுமின்றி, ஜெய்க்கு பெரிதாக மார்க்கெட் இல்லை என்பதால், அதே படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனி மற்றும் நாயகி டாப்சிக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். ஆக, அப்படத்தில் பெயரளவுக்குத்தான் ஜெய் ஹீரோவாம்.