ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2001ல் மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய படம் 12பி. இந்த படத்தில்தான் ஷாம் நாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சிம்ரன்-ஜோதிகா என்ற இரண்டு நடிகைகள் நடித்தனர். ஆனால், ஒவ்வொரு காட்சியுமே இயல்பாக வர வேண்டும் என்று நினைக்கும் ஜீவா, அந்த படத்தில் நடித்தபோது ஷாமுக்கு சரியான நடிப்பு வராததால், பலமுறை அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறாராம். அதனால் அவ்வப்போது மனசொடிந்துபோய் இருப்பாராம் ஷாம். அதைப்பார்த்து, அப்படத்தில் அசோசியேட் கேமராமேனாக ஒர்க் பண்ணிய இப்போதைய கேமராமேனான ஏகாம்பரம், ஷாமை அழைத்து, முதல் படத்தில் இந்த மாதிரி திட்டு வாங்குவதெல்லாம் சகஜம். எல்லா நடிகர்களுக்கும் இது நடந்திருக்கும்.
அதனால், அவர் திட்டுவதை மனதில் கொள்ளாமல் சிம்ரன், ஜோதிகாவை மட்டும் மனதில் கொண்டு நடி. உன்னை மாதிரி புதுமுக நடிகருக்கு சிம்ரன், ஜோதிகா என்ற இரண்டு பெரிய நடிகைகள் முதல் படத்திலேயே ஜோடியாக கிடைப்பது பெரிய விசயம். அதனால் டைரக்டர் ஜீவா சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளாமல், சிம்ரன், ஜோதிகாவை மடடும் மனதில் வைத்துக்கொண்டு நடி என்று அட்வைஸ் செய்வாராம். அதன்பிறகு அவர் சொன்னது போலவே, 12பி படத்தில் நடித்தபோது, ஜீவா எத்தனை முறை திட்டினாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட ஷாம், சிம்ரன், ஜோதிகாவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு நடித்தாராம்.