திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
புறம்போக்கு படத்தில் குயிலி என்றொரு போராளி வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்திகா. இந்த கேரக்டரில் நடிக்கிறபோது கார்த்திகாவின் முகத்தில் அழகு தெரியக்கூடாது என்பதற்காக அவரை டல் மேக்கப் போட்டே நடிக்க வைத்துள்ளனர். அப்படியிருந்தும் சில சமயங்களில் கேமரா முன்பு வந்ததும் அழகாக தெரிய அவரது முகத்தை மேலும் டல் பண்ணி நடிக்க வைத்துள்ளனர். அதோடு, முதன்முறையாக இந்த படத்தில் ஆக்சன் ரோலில் நடித்திருந்தாலும், கார்த்திகா கால் தூக்கி சண்டை செய்த விதம் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக இருந்ததாம். அந்த அளவுக்கு வித்தியாசமான பர்பார்மென்ஸ் கொடுத்திருக்கிறாராம்.
மேலும், புறம்போக்குவில் போராளியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு குயிலி என்று பெயர் வைத்து ஏன்? என்பது பற்றி டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் கூறுகையில், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு எதிரான ஒரு தற்கொலைப்படை தோன்றியது. அதன் தலைவியாக இருந்தவர் குயிலிதான். அதனால்தான் அவர் பெயரை கார்த்திகாவின் கேரக்டருக்கு வைத்தேன் என்றார்.
இதுபற்றி கார்த்திகா கூறுகையில், குயிலி வேடத்தில் நான் நடிக்கும்போது ஆர்யா எனக்கு நிறைய சப்போட்டாக இருந்தார். என்கரேஜ் செய்தார். அவர் மட்டுமின்றி, ஐந்து தோழர்களும் என்னுடன் நடித்தனர். அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இதற்கெல்லாம் மேலாக, டைரக்டர் ஜனநாதன், எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். தன்னை விட சிறியவர்களாக இருந்தாலும் மரியாதை கொடுத்தார். அந்த வகையில் அவர் வேலை வாங்கிய விதமே வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையுமே அவர் தோழராகவே பார்த்தார்.