அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜயசேதுபதி-கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். ஜெய்கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருந்தவர். இப்படத்தில் படம் முழுக்க விஜயசேதுபதியுடன் வரும் ஒரு கேரக்டரில் நடித்தவர் ராண்டில்யா. அதையடுத்து, தற்போது மையம் என்ற படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்திருக்கும் ராண்டில்யா, சராசரி உயரத்தை விட அதிகமாக அதாவது 6.3 உயரம் கொண்டவர். அதனால் தற்போது மேலும் சில படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்க கமிட்டாகிக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ராண்டில்யா கூறுகையில், சினிமாவில் வில்லனாகத்தான் நடிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஆனால் எனது உயரம், தோற்றம் என்னை வில்லனாக்கியிருக்கிறது. அதனால் வெயிட்டான வில்லனாக சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.
இதுதவிர, ராசாமதி, பாலாஜி, வெங்கட் உள்பட சில கேமராமேன்களிடம் உதவி கேமராமேனாக ஒர்க் பண்ணியிருக்கிறேன். அதோடு, விளம்பர படங்களுக்கு நானே கேமராமேனாகவும் வேலை செய்திருக்கிறேன். அதனால் அடுத்தபடியாக ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ராண்டில்யாவுக்கு சினிமாவில் நடிப்பு, ஒளிப்பதிவு என இரண்டு துறைகளிலும் புகழ் பெற வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.
அதேசமயம், இந்த இரண்டில் எந்த துறை எனக்கு முதலில் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கிறதோ அந்த துறையில் அதன்பிறகு முழுகவனத்தையும் செலுத்துவேன் என்கிறார் ராண்டில்யா.