ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாமிரபரணி, அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல் என பல படங்களில் நடித்தவர் பானு. ஹரி இயக்கிய ஐயா படத்துக்குப்பிறகு நயன்தாரா பிரபலமானதைப் போன்று, தாமிரபரணிக்கு பிறகு இவரும் பிரபலமாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையடுத்து அழகர் மலை என்ற படத்தில் நடித்த பானு, திடீரென்று காணாமல் போய் விட்டார். சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மாறாக, புதுமுக ஹீரோக்களின் படங்களாக சென்றதால், எந்த படத்தையும் ஏற்காமல் தட்டிக்கழித்து வந்த பானு, பின்னர் படமே இல்லாமல் போனதால், இப்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, பாம்பு சட்டை போன்ற படங்களில் கேரக்டர் நடிகையாகியிருக்கிறார்.
இந்த நிலையில், இப்போது தன்னை முழுநேர கேரக்டர் நடிகையாக்கி விடுவார்கள் போலிருக்கே என்று பயப்படும் பானு, புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து தனது ஹீரோயின் இமேஜை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நம்பி ஹீரோயினி சான்ஸ் கொடுக்கத்தான் ஆளில்லையாம்.