'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தான் நிகழ்வதற்கு, ரசிகர்களாகிய நீங்கள் தான் காரணம், உங்களுக்கு இந்த தருணத்தில், நன்றியை தெரிவித்துக்கொள்வதாக நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் ஹாட் மற்றும் செக்ஸி நடிகையான தீபிகா படுகோனே நடிப்பில் பிகு படம் விரைவில் வெளியாக உள்ளது. பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த தீபிகா படுகோனே, பிகு படத்தில் தனது கேரக்டர் பற்றியும், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....
பிகு படம் மற்றும் அதில் உங்கள் ரோல் பற்றி சொல்லுங்கள்...
அப்பா - மகள் இடையேயான உறவே பிகு படம்.....இந்த படத்தில், எனக்கு டைட்டில் ரோல், அதாவது, பிகு படத்தில், நான் பிகு கேரக்டரில் நடித்துள்ளேன். பிகு, குடும்ப பெண். ஆபிஸில் வேலை பார்த்துக்கொண்டே, குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறாள். குடும்பத்தை பெரிதும் நேசிப்பதால், தனது முழு அர்ப்பணிப்பை குடும்பத்திடமே காட்டுகிறாள்...
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக தமிழ் கற்றீர்கள், பிகுவிற்காக பெங்காலி கற்றீர்களா?
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக, தமிழ் மொழி கற்றேன். ராம்லீலா படத்திற்காக குஜராத்தி மொழி கற்றேன், ஆனால், பிகு படத்திற்காக, பெங்காலி கற்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிகு படம், பெங்காலி குடும்பத்தை சேர்ந்த கதை. இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் பெங்காலி மொழியில் பேச வேண்டியதிருந்தது. இதற்கு, 3 வார்த்தைகள் தான் என்பதால், பெங்காலி மொழியை முழுவதுமாக கற்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
உங்கள் கேரக்டரை ரசித்து செய்தீர்களா?
நிச்சயமாக...பிகு படத்தில் நான் மகள் கேரக்டரில் நடித்துள்ளேன். படப்பிடிப்பில் நான் இருந்தேன் என்று சொல்வதைவிட, பிகு குடும்பத்தில் இருந்த உணர்வையே நான் பெற்றிருந்தேன். அவ்வளவு அழகாக என் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. கேரக்டரை மிகவும் ரசித்து செய்துள்ளேன்.
அமிதாப் உடன் மீண்டும் இணைந்து நடித்தது குறித்து...
ஆரக்ஷன் படத்தை அடுத்து, பிகு படத்திலும், அமிதாப் பச்சனின் மகளாக நடித்துள்ளேன். பிகு படத்திற்கும், ஆரக்ஷன் படத்திற்கும் எவ்வித வேறுபாடும் எனக்கு தெரியவில்லை. பிகு படம் எனக்கும் அமிதாப் பச்சனிற்கும் இடையேயான உறவை விவரிக்கிறது. இந்த கேரக்டரை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்தேன். ஏனெனில், ஆரக்ஷன் படம் வெளிவந்தது, நான் திரையுலகிற்கு அறிமுகமான புதிதில்....ஆனால், தற்போது நான் மிகுந்த பக்குவம் அடைந்துவிட்டேன். அதன்காரணமாக, எனது தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த முறை, நான் மிகவும் விரும்பி, அதேநேரம் முழு அர்ப்பணிப்புடன் இந்த கேரக்டரில் நடித்தேன்.
இர்பான் கானுடன் இணைந்து நடித்தது குறித்து...
முதல்முறையாக, இர்பான் கானுடன் இணைந்து நடித்துள்ளேன். இர்பான் கான் சிறந்த நடிகர். இர்பான் கானுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன் என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
இந்த படத்திற்காக, அதிகமாக புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்களாமே?
இல்லை. அது 100 சதவீதம் தவறு. பிகு பட புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் நான் மட்டுமல்லாது, அமிதாப் பச்சன், இர்பான் கான் உள்ளிட்டோரும் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம். எல்லோரும் சேர்ந்தே பட புரோமோனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நிலையில், என்னை மட்டும் குறிப்பிட்டு குறை சொல்வது தவறு...
கிறிஸ்துமஸ் அன்று நீங்களும்...ஷாரூக்கும் மோத உள்ளீர்களாமே?
இல்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாங்கள் நடித்த படங்கள் வெளிவரவில்லை. நான் நடித்துள்ள பஜிராவ் மஸ்தானி படமும், ஷாரூக் கான் நடித்துள்ள தில்வாலே படமும் ஒரே நாளில் ரீலீஸ் ஆக உள்ளது. ஆனால், எந்த தேதி என்பது முடிவாகவில்லை. ஒரே நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், எனது படம், அதிக வசூல் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்...எவ்வாறு உணர்கிறீர்கள்?
மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 100 கோடி வசூலை ஈட்டியுள்ள படங்களின் நாயகி என்ற பெயர், என்னை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைத்தது போல் உள்ளது. எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாகவே, இதை கருதுகிறேன். என்னுடைய இந்த நிலைக்கு, அன்பார்ந்த ரசிகர்களே காரணம், இந்த மகிழ்ச்சியை நான் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ரசிகர்களுக்கு எனது நடிப்பு பிடிக்கவில்லையென்றால், படம் ஹிட் ஆக வாய்ப்பில்லை. எனவே, எல்லாப் புகழும் ரசிகர்களுக்கே.....என்று தீபிகா படுகோனே கூறினார்.