ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை த்ரிஷா தொழில் அதிபர் மற்றும் படாதிபதியான வருண்மணியன் திருமணம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஜனவரியில் த்ரிஷா, வருண் மணியன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, திருமணம் பற்றி இருவீட்டாரும் எடுத்த முடிவின்படி இந்நேரம் திருமணம் நடந்து முடிந்திருக்க வேண்டும்.
யாருமே எதிர்பாராத வகையில் த்ரிஷா, வருண் மணியன் திருமணம் திடீரென நின்றுபோனது. த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடப்பதால்தான் திருமணம் நின்றதாக ஊடகங்களில் செய்தி அடிபட்டது. இதுநாள்வரை மௌனம் காத்த த்ரிஷாவின் அம்மா தற்போது இதை மறுத்துள்ளார். மேலும் கல்யாணம் நின்றதன் காரணத்தை வெளிப்படையாகக் குறினால் பலரது மனம் புண்படும் என்பதால் காரணத்தையும் கூற மறுத்து விட்டார். இதற்கிடையில், த்ரிஷா, வருண் மணியன் திருமணமுறிவுக்கு தற்போது புதிய காரணம் ஒன்று கோலிவுட்டில் உலா வருகிறது. அதாவது, த்ரிஷாவின் கல்யாணம் நின்றதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தனுஷுக்கும், வருண் மணியனுக்கு ஏற்கனவே பல விஷயங்களில் மோதல் நடைபெற்றுள்ளது. அதனால் இருவருக்கும் தீரா பகை உணர்வு இருக்கிறதாம்.
இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தும் தனுஷை தன் திருமண நிச்சயதார்த்த பார்ட்டிக்கு அழைத்திருக்கிறார் த்ரிஷா. தனுஷும் கூலாக கலந்து கொண்டிருக்கிறார்.
இது வருண் மணியனுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனால் த்ரிஷாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனுஷ் எனது நண்பர் அதனால் நான்தான் அவரை அழைத்தேன் என்று அதற்கு பதில் சொன்னதோடு என் நண்பர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்று சண்டைபோட்டிருக்கிறார் த்ரிஷா.