தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுசாலமன் இயக்கிய மைனா, கும்கி, கயல் மற்றும் ரம்மி போன்ற படங்களில் மெலோடியான பாடல்களை கொடுத்து சுமார் 8 வருட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் இசையமைப்பாளர் டி.இமான். அதிலும் பிரபுசாலமன் படங்களில் அவரது பாடல்கள் பெரிதாக பேசப்பட்டதோடு, படங்களும் வெற்றி பெற்றதால் அவர்கள் வெற்றிக்கூட்டணியாகி விட்டனர். அதனால் பிரபுசாலமன் படம் என்றாலே இமான் கண்டிப்பாக இருப்பார் என்றாகி விட்டது. விளைவு, அடுத்தபடியாக தனுஷை வைத்து தான் இயக்கும் படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். முழுக்க முழுக்க அப்படத்தின் படப்பிடிப்பை வட இந்தியாவிலேயே நடத்துவதோடு, ரயிலில் நடக்கும் ஒரு காதலை படமாக்கப்போகிறார்.
அதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே வட இந்தியாவுக்கு சென்று லொகேசன் பார்த்து விட்டு வந்துள்ள பிரபுசாலமன், தான் படப்பிடிப்பு நடத்தும் பகுதிகளையும் மினி கேமராவில் பதிவு செய்து வந்திருக்கிறார். குறிப்பாக சில மலைக்குகைகளில் ரயில் செல்லும்போது எப்படி படமாக்க வேண்டும் என்று கேமராமேனுடன் இணைந்து டிஸ்கஸ் செய்கிறார்.
இந்நிலையில், டி.இமானும் தனது பாடல் கம்போஸிங் வேலைகளை தொடங்கி விட்டார். முந்தைய படங்களைவிட இந்த படத்தில் புதுமையான அதேசமயம் வித்தியாசமான மெலோடி பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான டியூன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம். குறிப்பாக, ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தில் டண்டனக்கா தொடங்கி சில புதிய படங்களில் அதிரடி பாடல்களுக்கு இசையமைத்து வந்த இமான், பிரபுசாலமன் படம் மூலம் மீண்டும் மெலோடி பாடல்களால் தமிழக ரசிகர்களின் மனசை வருடப் போகிறாராம்.