'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற வில்லங்க படங்களை எடுத்த சாமி. கங்காரு படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை எடுத்தார். முந்தைய படங்கள் பரபரப்பை கிளப்பி அதன் மூலம் கொஞ்சம் ஓடியது. கங்காருவால் நடக்ககூட முடியாமல் போனது. இதனால் பழைய பாணிக்கே திரும்பி விடலாமா என்று சாமி தீவிரமாக யோசித்து வருகிறார்.
அடுத்து இன்றைய நவீன பெண்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மையமாக கொண்டு வில்லங்கமான ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். சிந்து சமவெளியில் அமலாபாலையும், உயிரில் சங்கீதாவையும், மிருகத்தில் பத்மப்ரியாவையும் வைத்து கலங்கடித்த சாமி அடுத்து லட்சுமி மேனனை நடிக்க வைக்க தீவிரமாக இருக்கிறார்.
தனக்கு கிராமத்து வேடம்தான் வருகிறது என்ற கவலையில் இருக்கும் லட்சுமிமேனனை, பக்கா மார்டன் பொண்ணாக காட்டும் முடிவில் இருக்கிறார் சாமி. இதற்காக படத்தின் ஒன் லைனை தொலைபேசியில் லட்சுமி மேனனிடம் கூறியிருக்கிறார் சாமி. அது லட்சுமி மேனனுக்கு பிடித்து விட்டதாம். முழு கதையையும் கேட்டுவிட்டு என் முடிவை சொல்கிறேன் என்று லட்சுமி மேனன் கூறியிருக்கிறாராம். எப்படியும் கதை அவருக்கு பிடிக்கும் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார் சாமி.