வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குடிபோதையில் வண்டி ஓட்டி ஒரு உயிரை கொன்று, நான்கு உயிர்களை காயப்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதில் சல்மான்கானுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் பல நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்ததை பலர் வரவேற்கவும் செய்கிறார்கள்.. அவர்களில் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ் கோபியும் ஒருவர். சினிமாவில் நேர்மையின் உச்சமாக, எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகத்தையும் பொறுத்துக் கொள்ளாதவராக நடிப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. சினிமாவில் எப்படியோ நிஜத்திலும் அப்படியே இருப்பவர்.. இருக்க முயற்சிப்பவர்.
“சல்மான்கான் சிறந்த மனிதர் என்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்க கூடாது. அப்படி ஓட்டி விபத்து ஏற்படுத்தியபின், அதிலிருந்து தப்பிப்பதற்காக வழக்கை இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்திருக்க கூடாது. விபத்தில் இறந்ததும் ஒரு மனித உயிர்தானே.. இப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மனிதாபிமானம் சாகவில்லை என்பதை காட்டுகிறது. குடித்துவிட்டு வண்டி ஒட்டி ஒரு உயிரை கொன்ற சல்மான்கான் இந்த தண்டனை பெற தகுதியானவர் தான்” என கூறியுள்ளார் சுரேஷ்கோபி.