தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கும் தைரியம் இந்திய திரையுலகில் மற்ற எந்த நடிகர்களுக்கும் இல்லை என்றே அடித்து சொல்லலாம். 1996 தேர்தல் நேரத்தில் ஏர்போர்ட்டில் வைத்து அவர் அனைவருக்கும் போஸ் கொடுத்தபோது அவரது தலையில் விழுந்திருந்த வழுக்கை பலரை அதிர வைத்து. ஆனால் அதை எந்த கூச்சமும் இன்றி வெளிப்படுத்தினார் ரஜினி. படங்களில் மட்டும் விக், மற்றபடி வெளியிடங்களில் ஒரிஜினல் கெட்டப்.. இதுதான் ரஜினியின் பாலிஸி. ஆனால் படங்களில் மட்டும் டீசன்டான தனது ரோலை டேமேஜ் படுத்திக்கொள்ள மாட்டார் ரஜினி.
ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலோ இதற்கு நேர்மாறானவர்.. தான் நடித்த 'தன்மாத்ரா' என்கிற படத்தில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஒரு காட்சியில் ஜட்டியுடன் கூட நடிக்க ஒப்புக்கொண்டவர் தான் அவர். ஆனால் தனது தலையில் உள்ள முடி ஓரளவு குறைய ஆரம்பித்ததும் படங்களில் விக் வைத்துக்கொள்ள துவங்கினார். அதையே பொது இடங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். இன்றுவரையிலும் அப்படித்தான். தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலை வெளிக்காட்ட அவர் விரும்பவில்லை.
ரஜினி பல வருடங்களுக்கு முன்னரே நரைத்துவிட்ட தனது தலைமுடிக்கு டை அடித்து மறைத்ததாக இருபது வருடம் கழித்து சொன்னபோது, இங்கேயுள்ள ஒரு அரசியல் கட்சித்தலைவர் ரஜினி டை அடித்து அவரது ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் கூட குற்றம் சாட்டினார். அதேபோல மோகன்லால் விக் பயன்படுத்தி நடிக்கிறார் என கேரளாவிலும் ஒரு சிலர் குற்றம் சாட்டுவது உண்டு.. ஆனால் சமீபத்தில் மோகன்லால் அளித்த ஒரு பேட்டியில், “ஆமாம்.. நான் ரொம்ப நாளாக விக் வைத்துள்ளேன்.. என்னுடைய மேக்கப்பை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது என் உரிமை.. ஆனால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என பதிலடி தரும் விதமாக விளக்கம் அளித்துள்ளார்.