ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன். இந்த படத்திற்கு பிறகு நாயகியாக தொடர்ந்து நடித்து விட வேண்டும் என்று சில டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், யாரும் அவருக்கு பிடிகொடுக்கவில்லை.
அதனால், தற்போது அச்சமென்ன, பொய் சொல்லாதேடி மற்றும் டெம்பர் தெலுங்கு படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார். அதேசமயம், மே 22-ந் தேதி பாலக்காட்டு மாதவன் திரைக்கு வருவதால், இந்த படம் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் தனது மார்க்கெட் உயர்ந்து விடும் என்றும் கணக்குப் போடுகிறார் சோனியா அகர்வால்.
விளைவு, யாராவது தன்னை படங்களுக்கு புக் பண்ண வந்தால், பாலக்காட்டு மாதவன் படம் வந்தால் நான் பேசப்படுவேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக நடித்திருக்கிறேன். அதனால் கதையோடு கலந்த வெயிட்டான வேடங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்று பெரிய பில்டப்பை கொடுத்தே பேசத் தொடங்குகிறாராம்.
மேலும், புதிதாக அவருக்கு படங்கள் புக்காக வில்லை என்றபோதும், பல மொழிகளிலும் தனக்கு தற்போது புதிய படங்கள் விறுவிறுப்பாக புக்காகிக்கொண்டிருப்பதாக விரல்விட்டு எண்ணி, கதை சொல்லப்போகிறவர்களை தலைசுற்ற வைக்கிறாராம் சோனியா அகர்வால்.