தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
நாளைய பொழுது உன்னோடு, வைதேகி உள்பட சில படங்களில் நடித்தவர் ப்ருத்வி. நடிகர் பாண்டியராஜனின் மகனான இவருக்கு அதன்பிறகு சில படங்கள் கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால், கமிட்டான படங்கள்கூட பின்னர் வளரவில்லை. அந்த வகையில் நம்பிக்கையோடு காத்திருந்த ப்ருத்வியை கோலிவுட் ஏமாற்றி விட்டது.
அதனால், தற்போது வாய்மை என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு முன்பே ஒரு கேரக்டரில் நடிக்க கமிட்டான கே.பாக்யராஜ் தான், அந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் உள்ளது. உடனே அந்த டைரக்டரை சந்தித்து பேசு என்று ப்ருத்வியிடம் கூறினாராம். அதன்பிறகுதான் அப்பட டைரக்டர் செந்திலை சந்தித்து சான்ஸ் பெற்றிருக்கிறார் ப்ருத்வி.
மேலும், இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் அம்மா வேடத்தில் நடிக்க, அவருக்கு மகனாகத்தான் ப்ருத்வி நடித்துள்ளார். இதுபற்றி ப்ருத்வி கூறுகையில், பூர்ணிமா மேடம் எனது நண்பனின் அம்மாதான். சின்ன வயதில் இருந்தே அவர்கள் எனக்கு தெரியும். அவர்கள் வீட்டிற்கு போய் வந்திருக்கிறேன்.
இருப்பினும், அவர்கள் ஒரு சீனியர் நடிகை என்பதால், காம்பினேசன் காட்சிகளில் இணைந்து நடித்தபோது என்னையுமறியாமல் ஒரு பயம் ஏற்பட்டது. அதேசமயம், இந்த படத்தில் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, ஊர்வசி என பல சீனியர் நடிகர் நடிகைகளுடன் நடித்தது பெரிய அனுபவமாகவும் அமைந்தது. இந்தமாதிரியான வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்குமா என்று சொல்ல முடியாது என்கிறார் ப்ருத்வி.