துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சாலை விபத்து வழக்கில் ஐந்து ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தெலுங்கு நடிகை ரேணு தேசாய் துணிந்து நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டியுள்ளார். மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ரேணு தேசாய் தெருக்களில் குழந்தைகளுடன் குடும்பமாய் விலங்குகளைப் போல் மக்கள் துங்குவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. மேலும் சாலை என்பது வாகனங்களுக்கா மட்டுமே தவிர மக்கள் உறங்குவதற்காக அல்ல. நீதிமன்றத்தின் இது போன்ற தீர்ப்பு தேவையான ஒன்று தான். இதே போல் சாலையோரம் உறங்கும் மக்களுக்காக அரசாங்காம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். நடிகை ரேணு தேசாய் தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.