600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் குழுவினருக்கும், விஷால் குழுவினருக்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. சரத்குமார் பின்னணியில் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் உள்ளனர். விஷால் பின்னணியில் ஆர்யா, ஜீவா, நாசர் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு தனியார் தியேட்டர் நிர்வாகத்திற்கு குறைந்த விலையில் நீண்ட கால குத்தகைக்கு விட விஷால் அணியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரு அணியினருக்குமிடையே அடிக்கடி கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'உத்தம வில்லன்' விவகாரத்தில் சரத்குமாருக்கு விஷால் வாழ்த்து தெரித்திருந்தார். அதன் பின் விஷால் ஆதரவு நட்சத்திரங்களுக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை. நேற்று விஷால், “இதை நான் கல்லூரியில் முன்னர் செய்திருக்கிறேன், இப்போது மீண்டும். அனைத்துமே நல்ல விஷயத்திற்காகத்தான். தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் நேரம் இது,” என மறைமுகமாக நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறாரோ என யோசிக்க வைக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் களத்தில் குதித்தால் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.