'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லிங்கா, யாத்ரா என்று இரண்டு மகன்கள். ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகி உள்ளார். இந்த புதிய குழந்தையுடன் ரஜினிகாந்திற்கு இப்போது மூன்று பேரன்கள்.
70களிலேயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்று பாலசந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தன்னைப் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா. மகள்கள் இருவரையும் திரைத் துறையிலேயே பணியாற்ற ரஜினிகாந்த் சம்மதித்தார்.
ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். சௌந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்கினார். மகள்களைப் போல தன்னுடைய மூன்று பேரக் குழந்தைகளையும் திரைத் துறையில் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்துவாரா என்பது இன்னும் 15 வருடங்கள் கழித்துத் தெரியும்.