ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் சங்கத்தை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் தங்களது கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவில் 50 இடங்களும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 50 இடங்களும் வழங்கி அவர்களது கல்வி செலவை ஏற்று கொண்டதற்காக கல்வியாளர்கள் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு சென்னை கமலா தியேட்டரில், இயக்குநர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இயக்குநர்கள் விக்ரமன், செல்வமணி, வி.சேகர், கே.எஸ்.ரவிக்குமார், பாலா, பாக்யராஜ், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் பங்கேற்றார்.
விழாவில் தாணு பேசுகையில், விக்ரமன் அருமையான தலைவர். அவருக்கு பக்கபலமாக செல்வமணி, வி.சேகர் போன்றோரும் உள்ளனர். உத்தமவில்லன் படத்தின் போது என்னோடு சேர்ந்து விடிய விடிய போராடியவர் விக்ரமன். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக, விக்ரமனுக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம். இதில் அனைத்து திரையுலக பிரபலங்களும் பங்கேற்க வேண்டும்.
இந்த நேரத்தில், ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், படப்பிடிப்புக்காக டி.வி., மற்றும் மீடியாக்கள் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு படப்பிடிப்பு நடத்த போதிய இடமில்லை. ஆகையால் கோயம்பேடு அருகே தங்களுக்கு உள்ள காலியிடத்தை படப்பிடிப்புக்கு அளித்து உதவினால் எங்களுக்கும் நன்றாக இருக்கும். உங்களுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார்.
வி.சேகர் பேசுகையில், பல எம்.ஜி.ஆர்.,களை நாங்கள் உருவாக்க முடியும், அதற்கு உங்களை போன்றவர்களின் உதவி வேண்டும் என்று கூறினார்.
ஏ.சி.சண்முகம் பேசுகையில், எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்., அவரது வழியில் வந்த தம்பிகள் நாங்கள். 25 வயதில் நான் எம்.எல்.ஏ., ஆனேன். எங்களுக்கு கொடுத்து தான் பழக்கம், வாங்கி பழக்கமில்லை. இப்படியொரு தத்துவத்தை சொன்னவர் எம்.ஜி.ஆர். இந்த உலகில் நாம் எவ்வளவு நாள், எவ்வளவு பணத்தோடு வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நாள் புண்ணியம் செய்தோம் என்பது தான் முக்கியம். நாம் இறந்த பிறகு நம்மோடு வாட்ச், மோதிரம் போன்றவைகள் கூட வரப்போவதில்லை, ஆகையால் முடிந்த வரை கொடுத்து உதவுவோம். இது எங்களுக்கான பாராட்டு விழா அல்ல. இந்த பாராட்டுக்கள் அனைத்தும் விக்ரமன், சேகர் ஆகியோரைத்தான் சேரும். தாணு அவர்கள் கூறுவதை நிச்சயம் நாங்கள் பரிசீலிப்போம். எங்களது பொழுதுபோக்கே உங்களது படங்கள் தான் என்று பேசினார்.
ஐசரி கணேஷ் பேசுகையில், 12 வருடம் கழித்து நானும், ஏ.சி.சண்முகமும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இயக்குநர் சங்கத்திற்கு நன்றி. ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தேன், விக்ரம் சாரிடம் வாய்ப்பு வேண்டி சென்றுள்ளேன். ஒருவேளை நான் நடிகனாகியிருந்தால் இப்போது இங்கு நின்றிருப்பேனா என்று தெரியவில்லை. கலைத்துறைக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன் என்றார்.