மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். அதோடு தனக்கு ஜாமின் வழங்க வேண்டியும் சல்மான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மாலை 4 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற மும்பை ஐகோர்ட், சல்மான் கானுக்கு இரண்டு நாள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனால் சல்மான் இரண்டு நாள் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த சல்மான் கானுக்கு இந்த இரண்டு நாள் ஜாமின் ஒரு சிறு ஆறுதல் தான். இந்த இரண்டு நாளில் சல்மான், அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.