பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடித்த அரண்மனை படம் கடந்த வருடம் வெளிவந்தது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருந்ததாலோ என்னவோ அரண்மனை படத்தை அனைத்து தப்பினரும் ரசித்தனர். அதன் காரணமாக பெரிய வெற்றியடைந்தது - அரண்மனை. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 2 ஆம் பாகத்தை தற்போது சுந்தர்.சி எடுக்கவிருக்கிறார்.
ஆம்பள படத்திற்கு பிறகு சுந்தர்.சி. இயக்கும் அரண்மனை-2 படத்திற்கான வேலைகள் கடந்த சில நாட்களாக சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அரண்மனை 2 படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த சுந்தர்.சி. தற்போது நட்சத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். அரண்மனை 2 படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். அரண்மனை 2 படத்தில் காமெடியனாக சூரி நடிக்கிறார். வடிவேலுவுக்குப் பிறகு சுந்தர்.சியின் படங்களில் சந்தானம்தான் காமெடியனாக நடித்து வந்தார். அரண்மனை படத்திலும் சந்தானம் நடித்தார். அரண்மனை-2 படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அவர் காமெடியனாக நடிப்பதை தவிர்ப்பதாக தகவல்.