'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பவர் ஸ்டார் பவன் கல்யாண், பிரின்ஸ் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என் டி ஆர் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த நாள் வரும் 2016ம் ஆண்டின் சங்கராந்தியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. பவன் கல்யாண் நடிக்கும் கப்பார் சிங் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று அவரது ரசிகர்கள் ஏங்கி காத்து இருந்த நிலையில், இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் ரவீந்திரா இயக்கம் இந்த படத்தை நார்த் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக ஷர்ராத் மாரர் தயாரிக்கிறார். இந்த படம் வரும் 2016ம் ஆண்டின் சங்கராந்தியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது. பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் பேமிலி என்டர்டைனரான பிரம்மோத்சவம் படத்தின் பி வி பி தயாரிப்பு நிறுவனத்தின் பொட்லூரி வர பிரசாத் சங்கராந்தியில் ரிலீஸ் செய்வதில் மும்முரமாக இருக்கிறாராம். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டல இயக்குகிறார். எப்போதும் அதிரடி தலைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் ஜூனியர் என் டி ஆர் தற்போது பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் மா நான்னக்கு பிரேமதோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு மென்மையாக இருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் ஆக்ஷனுக்கு குறைவிருக்காது. இந்த படமும் 2016 சங்கராந்தியை குறி வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த மூன்று ஸ்டார் ஹீரோக்களின் படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தியேட்டர்கள் இல்லை என்பது தான் உண்மை. யார் பின்வாங்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.