இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'உருமி' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ், ஆர்யா இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துவரும் படம் 'டபுள் பேரல். இதே படம் தமிழில் 'இரட்டைக்குழல்' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்டார் ஹீரோக்களுடன் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித், ஆசிப் அலி மற்றும் சன்னிவெய்ன் ஆகியோரும் நடிப்பதால், இது அக்மார்க் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. அதுமட்டுமல்ல பார்வதி, ஸ்வாதி உட்பட படத்தில் ஐந்து ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
ஆர்யா-பிருத்விராஜ் கூட்டணியின் சொந்த தயாரிப்பாக இந்தப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே பிருத்விராஜ் நடித்த 'சிட்டி அப் காட்' படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். முதலில் இந்தப்படத்தை மேமாதம் ரிலீஸ் செய்வதாகத்தான் முதலில் பிளான் பண்ணியிருந்தார்கள்.. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இன்னும் முடியவில்லை.. எடிட்டிங் பணிகள் முடிந்து, தற்போது டப்பிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..
இன்னொரு பக்கம் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய உண்டு.. படத்தின் போஸ்டர்களை பார்த்தாலே அது தெரியும். மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படத்தில் பணிபுரிந்த அதே கிராபிக்ஸ் டீம் தான் இந்தப்படத்திலும் விறுவிறுப்பாக வேலைபார்த்து வருகிறது. ஆக இந்த வேலைகள் எல்லாம் முடிய இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் படத்தை ஜூலை-17 ரம்ஜான் பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.