இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முகமூடி படத்துக்குப்பின் தமிழில் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஒதுங்கிய நரேன் தற்போது மலையாளத்தில் 'ஹல்லேலூஜா' என்கிற படத்தில் மனோதத்துவ டாக்டராக நடித்து வருகிறார். சொந்த கிராமத்தை விட்டு சிறுவயதிலேயே பிரிந்துபோன நரேன், இருபது வருடங்கள் கழித்து ஒரு டாக்டராக கிராமத்துக்கு வருகிறார். இதன் பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேக்னா ராஜ்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கேரள காவல்துறை அசிஸ்டன்ட் டி.ஜி.பியான சந்தியா ஐ.பி.எஸ், இந்தப்படத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.. இந்தப்படத்தை இயக்கம் சுதி அன்னாவுக்கு சந்தியா நன்கு பழக்கமானவர். தனது கவிதை எழுதும் திறமையால் போலீஸ் வட்டாரங்களில் ரொம்பவே பாப்புலரானவர் சந்தியா. அதுமட்டுமல்ல இலக்கியம் சம்பந்தமாக ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, கேரளா போலீஸ் வரலாறு பற்றிய வெப்சைட் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.