ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கே முன்பு சிம்புவைக்கொண்டு கெளதம்மேனன் இயக்கி வந்த படம் சட்டென்று மாறுது வானிலை. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கெளதம்மேனனுக்கு அஜித் கிரீன் சிக்னல் கொடுத்ததால் சிம்பு நடித்த படத்தை நிறுத்தி விட்டு, என்னை அறிந்தால் படவேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். ஆனால், என்னை அறிந்தால் ரிலீசானதுமே, சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு அச்சம் என்பது மடமையடா என்று பெயர் வைத்து படப்பிடிப்பை தொடங்கினார். அப்பட வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், ஹீரோயினி போர்ஷன் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லையாம்.
காரணம், முன்பு அப்படத்துக்காக கால்சீட் கொடுத்திருந்த வட இந்திய நடிகை பல்லவி சுபாஷ் இப்போது வேறு சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதால் கெளதம்மேனனின் அழைப்புக்கு செவ்சாய்க்கவில்லையாம். அதனால், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.