ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
1990ல் புரியாத புதிர் படத்தில் இயக்குனரான அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். அதைத்தொடர்ந்து விஜயகுமார், சரத்குமாரை வைத்து அவர் இயக்கிய சேரன் பாண்டியன் படம் அவருக்கு மெகாஹிட்டாக அமைந்தது. பின்னர் அவர் இயக்கிய நாட்டாமை அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதனால், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி முன்னணி இயக்குனரானார் ரவிக்குமார். மேலும், ரஜினியை வைத்து படையப்பா, முத்து படங்களை இயக்கிய அவர், லிங்கா படத்தையும் இயக்கினார். ஆனால், எதிர்பார்த்தபடி அப்படம் வெற்றி பெறவில்லை.
இருப்பினும், ரஜினி படத்திற்கு முன்பே நான் ஈ சுதீப்பை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக கூறி வந்த ரவிக்குமார், பின்னர் ரஜினியின் கால்சீட் கிடைத்ததால் சுதீப் இயக்குவதை தள்ளி வைத்து விட்டு ரஜினி பட வேலைகளில் இறங்கினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ரவிக்குமாருக்கு கால்சீட் கொடுத்திருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் நான் சுதீப். தற்போது கன்னடத்தில் ரேட் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், அப்பட வேலைகள் ஜூன் மாதம் முடிவடைவதால், ஜூலை மாதம் முதல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகிறது. அதனால், தற்போது தனது படத்தில நடிப்பதற்கான நடிகர் நடிகைகளை பரிசீலனை செய்து வரும் ரவிக்குமார், சில முன்னணி ஹீரோயினிகளிடமும் கால்சீட் கேட்டு வருகிறார்.