இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தென்னிந்திய மற்றும் வட இந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜெயப்ரதா தற்போது இந்திய பார்லிமென்ட்டில் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை ஜெயப்ரதா தமிழில் இறுதியாக, கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது மகனை நாயகனாக வைத்து தமிழில் ஒரு படத்தையும் தயாரித்தும் வருகின்றார். ஜெயப்ரதா கடைசியாக இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ராஜியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சஞ்சய் சர்மா இயக்கும் இந்தி படத்தில் நடிகை ஜெயப்ரதா ராணி சாஹிபா வேடத்தில் ராணியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் என்று கூறப்படுகின்றது. நடிகை ஸ்ரீதேவி புலி படத்தில் ராணியாக நடிப்பதைத் தொடர்ந்து நடிகை ஜெயப்ரதாவும் ராணியாக நடிக்கவுள்ளார்.