மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்ட முடிவு எடுத்துள்ளனர். மேலும் மெகா ஸ்டார் இந்த பிறந்த நாளில் தனது 150வது படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சந்தித்த அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக தங்களுக்கு உள்ளேயே பணம் வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆள் ஒன்றிக்கு ரூ 5 ஆயிரம் வரையில் பெறப்பட்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட ரூ 50 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை அவரது ரசிகர்கள் திரட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனை எப்படியோ தெரிந்த கொண்ட பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரொம்பவே அப்செட் ஆகினாராம். உடனடியாக பவன் கல்யாண் மெகா ஸ்டாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் சிலரை அழைத்து செம டோஸ் விட்டாராம். மெகா ஸ்டாரின் பெயரில் பண வசூல் செய்து அவரது பெயரை கெடுத்து விடாதீர்கள் என்று கடிந்து கொண்டாராம். இதனால் மெகா ஸ்டாரின் பெயர் காப்பாற்றப்பட்டதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.