விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
விரைவில் பிரின்ஸ் மகேஷ் பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த நட்சத்திர தம்பதியினரின் மகன் கௌதம் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்களாம். இந்த பிரபல காட்டமனேனி குடும்பத்தில் இருந்து ஏற்கனவே பிரபல பத்மாலயா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இருப்பதை அனைவரும் அறிவர். இது தவிர அந்த குடும்பத்தை சேர்ந்த பிரபலமான மஞ்சுளா தலைமையில் இந்திரா ப்ரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும், மற்றொரு பிரபலமான ரமேஷ் பாபுவுக்கு கிருஷ்ணா ப்ரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இருப்பது நினைவிருக்கலாம்.தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து கௌதம் ப்ரோடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கின்றனர். இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற பிரபல ஹீரோக்களின் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே மகேஷ் பாபு வித்தியாசமான கதைகளத்தில் நடிக்கவே விரும்புவார். ஆனால் அவர் தொடங்க இருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனமும் வித்தியாசமான படங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.