வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
திருடா திருடி, அனந்தபுரத்து வீடு உள்பட பல படங்களில் நடித்தவர் சாயா சிங். தற்போது யாத்ரீகன் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். ஹீரோவாக கிஷோர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் நேபாள எல்லையில் உள்ள சிலிகுடியில் நடப்பதாக இருந்தது. இதற்காக சாயாசிங், கிஷோர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பெங்களூரிலிருந்து சிலிகுடிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.
படப்பிடிப்பு தொடங்குதற்கு முதல் நாள் சாயாசிங் தனது தாயாருடன் ஊரை சுற்றிப்பார்க்க காரில் சென்றார். அப்போதுதான் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பூகம்பம் ஏற்படுகிறது காரில் இருந்து இறங்கி ஓடுங்கள் என்று டிரைவர் கத்தியிருக்கிறார். அதன் பிறகு சாயாசிங்கும், அவரது தாயாரும் ஓட்டலுக்கு ஓடினர். ஓட்டலில் இருந்தவர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். பூகம்ப பீதி முடிந்ததும் ஓட்டலுக்கு திரும்பினார்கள். சிலிகுடியை சுற்றி பூகம்பம் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த செய்தி பிறகுதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
"இறைவன் அருளால் நாங்கள் உயிர் தப்பினோம். மக்கள் பயந்தபடி அங்கும் இங்கும் ஓடிய காட்சி மறக்க முடியாதது. இயற்கையின் சக்தியையும், மனிதனின் உயிர் பயத்தையும் ஒரே நேரத்தில் கண்டபோது வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பு குறைந்திருக்கிறது" நேபாள எல்லை கிராமத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பி விட்டோம் என்கிறார் சாயாசிங்.