ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருவண்ணாமலைக்கு பிறகு சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக கருதப்படுவது கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையாகும். இங்கு வாழ்ந்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் சினி சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் சாய் ரமேஷ் என்பவர் இதனை இயக்கி உள்ளார். அருண் கதையின் நாயகனான நடித்துள்ளார். அர்ச்சனாசிங் கதையின் நாயகியாக நடித்துள்ளார். டி.கவுதம சந்திரன் இசை அமைக்கிறார். ஏ.அஜய் ஆதித் ஒளிப்பதிவு செய்கிறார். வெள்ளியங்கரி மலை பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
"இயற்கையின் சக்தியை வென்றவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சித்தர்கள் வெள்ளியங்கிரி மலை பகுதியில் நிறைய வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆதிகுரு சித்தர். அவரின் வாழ்க்கை அதிசயங்கள் அந்த பகுதியில் பிரபலமானது. அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளோம். இது பக்தி படமோ, மாயாஜால படமோ அல்லது எல்லா சக்திகளும் நிறைந்த வரலாற்று படம். விரைவில் வெளியிட இருக்கிறோம்.