தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-2 படத்தில் நடிக்க இருப்பதாக த்ரிஷா வாயைத் திறந்த நேரம்... அந்தப் படமே ஒத்தி வைக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' படம் கடந்த வருடம் வெளிவந்தது.
இப்போது காஞ்சனா-2 ஓடுவதுபோல் அப்போது அரண்மனை படம் ஓடியது. அபபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகத்தையும் சுந்தர்.சி எடுக்கவிருக்கிறார் என அப்போதே செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஆம்பள படத்தில் பிஸியானார் சுந்தர்.சி. தற்போது அரண்மனை-2 படத்திற்கான வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. 'அரண்மனை 2'விற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருந்தார் சுந்தர்.சி.
இந்நிலையில், 'அரண்மனை 2' படத்தில் தான் நாயகியாக நடிக்கவிருக்கும் செய்தியை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார் த்ரிஷா. இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார் என்பதையும் சொன்ன த்ரிஷா, தெலுங்கில் வெளிவந்த 'நுவ்வோஸ்டனன்டே நேனோட்டன்டனா', மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தைத் தொடர்ந்து சித்தார்த் உடன் 'அரண்மனை 2'வில் 3வது முறையாக ஜோடி சேருவதாகவும் தெரிவித்தார் த்ரிஷா. இதற்கிடையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்திருப்பதாகவும்... அதனால் அரண்மனை 2 படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.