வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
'லிங்கா' படத்தின் தோல்வியை மறக்கச் செய்வதற்காக ரஜினிகாந்த் அடுத்த படத்தில் உடனே நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். அவர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்று 'லிங்கா' வெளியான சமயத்திலிருந்தே செய்திகள் வர ஆரம்பித்தன. அந்தப் படம் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் ஆமீர்கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். பத்து நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசன் வில்லன் என்றும் பின்னர் விக்ரம் வில்லன் என்றும் சொன்னார்கள்.
இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிக்கப் போவதாக நேற்று திடீரென ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள். ஆனால், ரஜினி நடிக்கும் படத்தைப் பற்றி பொதுவாக அவரோ, அல்லது அப்படத்தின் தயாரிப்பாளரோதான் முறைப்படி அறிவிப்பார்கள். ஆனால், இந்த்த் தகவலை ரஞ்சித் தரப்பிலிருந்துதான் வெளியில் சொல்லியிருப்பார்கள் என்று ரஜினிகாந்த் தரப்பு வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், ரஜினிகாந்த் அடுத்து அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல் நகைச்சுவைப் படமொன்றில் நடிக்கத்தான் முடிவெடுத்துள்ளார் என்றும் அதை சுந்தர்.சி இயக்கப் போகிறார் என்றும் சில தகவர்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில் 'காஞ்சனா 2' படத்தின் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூட இருக்கிறார் என்கிறார்கள்.
இப்படி திசைக்கொரு பக்கமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றி வேண்டுமென்றே இன்னொரு நடிகர் தரப்பிலிருந்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது என்றும் திரையுலகத்தினர் சிலரும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் ரஜினிகாந்த் தரப்பு கவனமாகப் பார்த்து வருவதாகவும் தக்க சமயத்தில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.