பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இது மலையாள சினிமாவில் காதாசிரியர்களாக இருக்கும் இரட்டையர்கள் பிரிவதும், அவர்களில் ஒருவர் இயக்குனராவதுமான சீசன் போல.. அந்த லிஸ்ட்டில் பிரபல இரட்டை கதாசிரியர்களான சாச்சி-சேது இருவரில் ஏற்கனவே சாச்சி தனியாக பிரிந்து பிருத்விராஜை வைத்து 'அனார்கலி' என்கிற படத்தை இயக்கிவருகிறார். இப்போது சேதுவும் ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார்.. இவர் இயக்கவுள்ள கிராமத்து கதையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி கார் ஒன்று தான் பிரதான ரோலில் நடிக்கிறது.. கூடவே சப்போர்ட்டுக்காக ஒரு ஹீரோவும் நடிக்கிறார். தமிழில் கூட இப்படித்தானே 'பண்ணையாரும் பத்மினியும்' என்கிற படத்தில் ஒரு பிரிமியர் பத்மினி காரை பயன்படுத்தினார்கள்..
மலையாள சினிமாவில் கார், ஆட்டோ, பைக், பஸ் இவற்றையெல்லாம் பிரதான கதாபாத்திரங்களாக வைத்து நகைச்சுவை படம் எடுப்பது பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. “இன்று கார் வைத்திருப்பவர்களில் யாரை கேட்டாலும் தங்களது முதல் காராக மாருதி வைத்திருந்ததாகத்தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பலபேரின் வாழ்க்கையில் மாருதி காருக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தின் கதை ஒரு மாருதி காருக்கும் ஹீரோவுக்குமான பந்தத்தை பற்றியது என்கிறார் சேது.