தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோ பட நாயகியான கார்த்திகாவும், அவரது சகோதரியான கடல் படநாயகி துளசியும், அவர்களது தாயார் ராதா, பெரியம்மா அம்பிகா போன்று சினிமா உலகை ஒரு கலக்கு கலக்குவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அவர்களது என்ட்ரியும் கலக்கலாகத்தான் இருந்தது.
கார்த்திகா கே.வி.ஆனந்த் இயக்கத்திலும், பின்னர் பாரதிராஜா இயக்கத்திலும் நடித்தார். அதேபோல் துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். இருப்பினும், அடுத்தடுத்து அவர்களுக்கு சரியானபடி படங்கள் இல்லை. யான் படத்திற்கு பிறகு துளசி நாயரை காணவில்லை.
இந்த நிலையில், கார்த்திகா மட்டும் தாக்குப்பிடித்துக்கொண்டு நிற்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தபடம் வந்தால், வழக்கமான நடிகைகளில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான நடிகையாக அவர் இடம்பிடிப்பார் என்கிறார்கள்.