தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நடிகரானபோது தனக்குத்தானே பின்னணி பாட வேண்டும் என்ற ஆர்வம் துளியும் இல்லாமல்தான் இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க அவர் கமிட்டானபோதுதான், இசையமைப்பாளர் டி.இமான் கண்டிப்பாக ஒரு பாட்டு பாட வேண்டும் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆசையை ஏற்படுத்தினார். அதுவரை ஏதோ பாத்ரூம் பாடகராக மட்டுமே இருந்து வந்த சிவகார்த்திகேயன், சரி பாடித்தான் பார்ப்போமே என்று அந்த படத்தில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாட்டு பாடினார். ஆனால் அப்பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. ரசிகர்கள் அந்த பாடலுக்கு கொடுத்த வரவேற்பு காரணமாக பின்னர் தான் நடித்த மான்கராத்தேயில் ராயபுரம் பீட்டரு, காக்கி சட்டையில் ஐ எம் ஷோ கூல் ஆகிய பாடல்களை பாடினார். இந்த பாடல்களும் பேசப்பட்டது. அதோடு முதல் பாடலை விட இன்னும் சிறப்பாக பாடியிருந்தார் சிவகார்த்திகேயன். மேலும், இப்போது அவருக்கென ஒரு ரசிகர் வட்டமும் உருவாகியிருப்பதால், அவரது ரசிகர்கள் அவரை படத்துக்குப்படம் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால், இனிமேல் தான் நடிக்கு படங்களில தனது குரலுக்கு பொருத்தமான ஒரு பாடலை பாடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.