12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
தமிழில் பூ படத்தில் அறிமுகமான பார்வதி மேனன், அதையடுத்து, மரியான் படத்திலும் நாயகியாக நடித்தார். அதையடுத்து சென்னையில் ஒருநாள் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், கமலின் உத்தமவில்லன் படத்தில் அவரது மகளாகவே நடித்திருந்தார்.
சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் வேடம் என்றாலும், அழுத்தமான கதாபாத்திரம். கமலின் மகள் என்றபோதும், சிறுவயதில் இருந்தே ஜெயராமின் மகளாக வளர்ந்த பார்வதிமேனன், பின்னர் தனது தந்தையான கமலை சந்திக்கும்போது அவரிடம் பேசும் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த காட்சிகளில் நடித்து முடித்ததும் கமலே அவரை வெகுவாக பாராட்டினாராம். மேலும், அப்படத்தில் நடித்த ஜெயராம், பூஜாகுமார் ஆகியோரும் படத்தை முதல்நாள் பார்த்தவுடன் அவரை அழைத்து பாராட்டி உற்சாகப்படுத்தினார்களாம். அதனால் மிதமிஞ்சிய சந்தோசத்தில் இருக்கும் பார்வதி, முதலில் பூஜாகுமார், ஆண்ட்ரியா என்ற இரண்டு நடிகைகள் இருக்கும்போது நமக்கு என்ன பெரிதாக கேரக்டர் கிடைக்கப்பேகிறது என்றுதான் நடிக்கச்சென்றேன். ஆனால், அந்த கேரக்டர் பற்றி கமல் சார் சொன்னதும் அது என்னை ஈர்த்து விட்டது. வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான ரோல் என்பதால் அதிக ஈடுபாடு காட்டி நடித்தேன். அதனால் சிறிய வேடம் என்னை பெரிதாக பேச வைத்து விட்டது. அதற்காக கமல் சாருக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் பார்வதிமேனன்.