பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'நான் ஈ' படத்தின் வெற்றி இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. முதலில் மே மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஜுலை மாதம்தான் வெளியிட உள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவற்றின் பணிகள் இன்னும் முடியாததே கொஞ்சம் தாமதமான வெளியீட்டிற்கான காரணம் என ராஜமௌலி கடந்த வாரம் அறிவித்தார்.
அதோடு அவர் அறிவித்தபடி படத்தின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக ஒன்றன்பின்ஒன்றாக வெளியிட்டு வருகிறார்கள். மே 1ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. சற்று முன்னர் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். நடிகர் பிரபாஸ் ஒரு சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜமௌலி கூடவே,
“கங்கையை ஏந்திடும் சிவனை
தோளினில் ஏந்திடும் இவனை
யார் எனப் பார்த்திடும் ஞாலம்
ஒரு கணம் நின்றிடும் காலம்”
என்ற பாடலையும் சேர்த்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.