பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கமல் என்ற மகா கலைஞனை கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தவர் கே.பாலச்சந்தர். நல்ல குரு, சிஷ்யன் உறவுக்கு இப்போதும் பாலச்சந்தரையும், கமலையும் அடையாளம் காட்டுவார்கள். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தரை பாலச்சந்தராகவே பதிவு செய்திருக்கிறார் கமல். உத்தம வில்லன் படத்தை பார்த்தவர்கள். இயக்குனர் சிகரத்தை இழந்த வலியை உணர்கிறார்கள். உத்தம வில்லன் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் கே.பாலச்சந்தர் கமலஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் கே.பாலசந்தர் எழுதியிருப்பதன் சுருக்கம் வருமாறு: கமலை நான் கண்டறியவில்லை. அவரை அவரே கண்டறிந்து கொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தேன். அதன் மூலம் என்னை நானே அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. கமல் சினிமா வீதிகளில் நடக்க கற்றுக் கொண்டபோது தனது கையை பற்றிக் கொள்ள எனக்கு அனுமதி அளித்தார். அடுத்து அவரது கற்பனா சக்தியின் எல்லையை காண்பித்தபோது நான் அதில் ஆராய்ந்தேன். அவரது படைப்பாற்றலின் எல்லை விரிந்தபோது அதற்கான பசி அதிகரித்தபோது நான் அவரை மனப்பூர்வமாக என்னிடமிருந்து விடுவித்தேன். அவர் தன்னை அறிந்து கொள்ள சிறகுகள் விரித்து பறந்ததைப் பார்த்தேன்.
கமல் எந்த விதியையும் பின்பற்றுபவரல்ல, தனக்கான விதியை தானே உருவாக்குகிறார். பின்பு அவரே அதை உடைத்து புதிய விதியை உருவாக்குவார். அவருக்கு தெரிந்த அனைத்தும் நான் கற்றுக் கொடுத்ததல்ல. எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். மற்றவற்றை அவரே படித்து, பார்த்து, அனுபவித்து கற்றுக் கொண்டார். தனது எல்லைகளுக்கு அப்பால் செல்ல அவர் என்றைக்குமே தயங்கியதில்லை
சினிமாவுக்காக தனது புகழையும், பணத்தையும் யாரும் கமலைப்போல பணயம் வைத்ததில்லை. கமல் பெற்றதை விட இழந்ததே அதிகம். போட்டிகளையும், போட்டியாளர்களையும் கடந்தவர் அவர். இந்தியாவின் மீதிருக்கும் தீராத பற்றே அவர் உற்சாகத்துக்கு காரணம். அவர் தனித்து உயர்ந்து நிற்கிறார். அவர் ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்.
அவரது பாதங்கள் இந்திய மண்ணோடு கலந்து உறுதியாக நிற்கின்றன. புகழ் தரும் சலனத்துடன் சண்டையிட்டு நிலைத்து நிற்கும் உண்மையான, நிலையான படைப்பாற்றலை தேடி நிற்கிறார். அதில் காயங்கள் ஏற்பட்டாலும் அவர் தோற்கவில்லை. தாழ்ந்து போகவில்லை. டேய் கமல் ரொம்ப பெருமையா இருக்குடா...