வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜீவாவின் சினிமா கேரியரை சிங்கம்புலிக்கு முன்பு சிங்கம்புலிக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பெல்லாம் அவரது படங்களில் வசனங்கள் ரொம்ப டீசன்டாக இருக்கும். ஆனால் அதன்பிறகு படத்துக்குப் படம் மச்சி, பச்சி என்று லோக்கல் தமிழில் பேசி நடித்தார்.
இதனால் கோடம்பாக்கத்தில் ஜீவாவை மச்சி நடிகர் என்று அடைமொழி வைத்து அழைக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், ஒருகட்டத்தில் ஜீவாவுக்கே இது பிடிக்கவில்லை. தன்னைத்தேடி வரும் டைரக்டர்களெல்லாம் மச்சி என்ற வசனத்தை வலுக்கட்டாயமாக திணித்ததால் தடுமாறிக்கொண்டு வந்தார்.
இந்தநிலையில்தான், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிய யான் படம் அவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் தனது வழக்கமான டயலாக்குகள் எதுவும் இல்லாமல் டீசன்டாக பேசி நடித்தார். அதோடு, இப்போது கவலை வேண்டாம், திருநாள் போன்ற படங்களில் நடிக்கும் ஜீவா, இந்த படங்களின் டைரக்டர்களிடமும் இனிமேற்கொண்டு டீசன்டான நடிகராக விரும்புகிறேன். அதனால் அந்த மச்சி, பச்சி டயலாக்குகளை தவறியும் சேர்த்து விடாதீர்கள் என்று பர்சனலாக கேட்டுக்கொண்டாராம்.