தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு காலத்தில் பாட்டு எழுதி அதற்குத்தான் மெட்டமைத்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் மெட்டுக்கு பாட்டெழுதும் முறையை கொண்டு வந்தனர். இப்போது அதுவே வழக்கமாகி விட்டது. ஆனபோதும், வித்யாசாகர் போன்ற சில இசையமைப்பாளர்கள் நல்ல பாட்டு வேண்டும் என்று நினைத்து சூழலுக்கு பாடலாசிரியர்களை பாட்டு எழுத வைத்து அதன் பிறகே மெட்டமைத்து வருகின்றனர். அந்த முறையை இப்போது ஸ்ரீகாந்த் தேவாவும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். முதன்முறையாக அங்காளி பங்காளி என்ற படத்தில் அனைத்து பாடல்களையும் எழுத வைத்தே டியுன் போட்டிருக்கிறாராம். அந்த பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் கூறியதால் இனிமேல் பாட்டுக்கு மெட்டு போடும் முறையை தானும் பின்பற்றப்போவதாக கூறி வரும் ஸ்ரீகாந்த்தேவா, இதன்காரணமாக பாட்டு எழுதுவர்களின் கையை கட்டிப்போடாமல், சுதந்திரமாக அவர்களது சிந்தனைகளை எழுத வைக்கவும் முடியும். ரசிகர்களுக்கும் நல்ல தரமான பாடல்கள் கிடைக்கும் என்கிறார்.