தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, ஒரு கல் ஒரு கண்ணாடியில் வேணாம் மச்சான் வேணாம், கொம்பனில் கருப்பு நிறத்தழகி என பல ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் வேல்முருகன். சினிமாவில் பிசியாக பாடிக்கொண்டிருந்தாலும், நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக சமீபகாலமாக கூறி வந்தார் இவர். இந்தநிலையில், தற்போது கவுண்டமணி நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் அவரது உதவியாளர் வேடத்தில் நடிக்கிறார் வேல்முருகன். இப்படத்தில் கவுண்டமணி அன்றாடம் சந்திக்கும் விசயங்கள், பிரச்சினைகள் என ஒன்றுவிடாமல் அவரது அசைவுகளை போட்டோ எடுப்பதோடு, அவற்றை பேஸ்புக்கில் அப்டேட் செய்யும் வேடத்தில் அவர் நடித்திருக்கிறாராம்.
இதுபற்றி பாடகர் வேல்முருகன் கூறுகையில், கவுண்டமணி சாரை நான் சிறுவயதில் இருந்தே ரசித்து வந்தவன். அந்த வகையில், மிகப்பெரிய நடிகரான அவருடன் எனக்கு முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். அதோடு, இந்த படத்தில் நான் உதவியாளராக நடித்தாலும், படம் முழுக்க அவருடன் வருகிறேன். அதோடு காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறேன் என்று சொல்லும் வேல்முருகன், கவுண்டமணி தன்னிடம் ரொம்ப இயல்பாக பழகியதாகவும் கூறுகிறார்.
நான் அவரை கண்டு ஒதுங்கி நின்றாலும், அவர் என்னிடம் இயல்பாக பேசிப்பழகினார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போதே என்னிடம் நிறைய நேரங்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். இதை என்னால் மறக்கவே முடியாது. அப்படிஅவர் பழகியதால்தான் முதல் படம் என்றபோதும் எந்தவித பதட்டமும் இல்லாமல் என்னால் நடிக்க முடிந்தது என்று கூறும் வேல்முருகன், தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்.