ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சமீபகாலமாக ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி வருபவர் பாடலாசிரியர் அண்ணாமலை. வருகிற 8-ந்தேதி திரைக்கு வரும் இந்தியா பாகிஸ்தான் படத்தில் இவர் எழுதியுள்ள, ஒரு பொண்ணை பாத்தேன் மாமா, வாடி குட்டி லேடி ஆகிய பாடல்கள் தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதையடுத்து சுகன் கார்த்திக் இயக்கத்தில் மூன்றாம் உலகப்போர் என்ற படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள அண்ணாமலை, அந்த பாடல்களை தேச உணர்வினை ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறாராம். குறிப்பாக, 2020-ல் மூன்றாம் உலகப்போர் வந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், வேத்து சங்கர் இசையில் தான் எழுதியுள்ள இந்திய நாடே என்ற பாடலை மிகப்பெருமையாக குறிப்பிடுகிறார்.
அந்த பாடலின் வரிகள் பற்றி அவர் கூறுகையில்,
இந்திய நாடே நீ வெறும் நீரும் நிலமா, எங்கள் உயிரின் சுவாசம்
ஒரு துளி உதிரம் இருக்கிற வரைக்கும் என்னுயிர் தேசத்தை காக்கும்