விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் புதிய படமான கப்பார் சிங் 2 எப்போது ஆரம்பிக்கப்படும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவெனில், அந்த படம் சம்பந்தமாக வெளிவரும் செய்திகளுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் இருந்து வருவதால் அவரது ரசிகர்கள் பெரும் மனக் குழப்பத்திலும், வருத்தத்திலும் இருக்கின்றனர். அத்தரின்டிகி டாரேடிஎன்ற மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. அவருடைய கோபால கோபால என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து பவர் ஸ்டார் மீண்டும் ஒரு மெகா ஹிட் கொடுக்கவே காத்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகின்றது. இதன் விளைவாக கப்பார் சிங் 2 படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே அந்த வேலைகள் முழுமை பெற சிறிது காலம் ஆகும் என்றும் கூறப்படுகின்றது. அதனால் தான் அவர் தற்போது நீண்ட தாடியுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எப்படியோ விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வரவேண்டும் என்பது தான் அவருடைய ரசிகர்களின் ஆசை மற்றும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.