மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த படமாக விருதுபெற்ற மராத்திய படம் 'கோர்ட்'.. மராத்தியில் மட்டுமல்லாது குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் இந்தப்படம் தயாராகியுள்ளது. இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட இருபது விருதுகள் வரை வாங்கியிருக்கிறது.. சமூக பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து சைதன்யா தம்ஹான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தான் பெங்களூரில் ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் மறுத்துவிட்டார்கள்.. கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் பல காலமாக இருந்துவரும் வடக்கு எல்லை பிரச்சனை தான் இதற்கு காரணம். கர்நாடகாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று மகாராஷ்டிரா பல வருடங்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் மராத்தி தான் பேசுகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப்படத்தை பெங்களூரில் ரிலீஸ் செய்தால் அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம் என கருதி இந்தப்படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைத்துவிட்டார்கள்.